search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலக்கரி சுரங்க ஊழல்"

    நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் குப்தா மற்றும் இரண்டு அதிகாரிகளுக்கு தலா 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. #CoalScam #DelhiCourt #CBIJudge
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முந்தைய ஆட்சியில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் மேற்கு வங்காளத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தின் இரு பிரிவுகளை ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக மத்திய நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் குப்தா மற்றும் 5 பேர் மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பெற்ற விகாஸ் மெட்டல்ஸ் அண்ட் பவர் லிமிடெட் நிறுவனம் (விஎம்பிஎல்) மீது டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    நீதிபதி பரத் பராஷர் முன் நடந்த இந்த விசாரணையின் முடிவில் அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் குற்றவாளிகளுக்கான தண்டனை தொடர்பான வாதம் நடைபெற்றது. அப்போது, குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அதிக அளவில் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் சி.பி.ஐ. தரப்பு கோர்ட்டில் வாதிட்டது.


    70 வயது குப்தாவுக்கு பல்வேறு நோய்கள் இருப்பதால் அவருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அவரது வக்கீல் கோரிக்கை விடுத்தார். இருதரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    அதன்படி குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் குப்தா, மற்ற இரண்டு அதிகாரிகளான கே.எஸ்.கிரோபா, கே.சி.சம்ரியா ஆகியோருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    மற்ற குற்றவாளிகளான விஎம்பிஎல் நிறுவன நிர்வாக இயக்குனர் விகாஸ் பன்டி, நிறுவனத்தின் சார்பில் கையெழுத்திடும் அதிகாரம் கொண்ட அதிகாரி ஆனந்த் மாலிக் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. விஎம்பிஎல் நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. #CoalScam #DelhiCourt #CBIJudge
    நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் தொடர்புடைய 6 குற்றவாளிகளின் தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படுகிறது. #CoalScam #Punishment #HCGupta
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முந்தைய ஆட்சியில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் மேற்கு வங்காளத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தின் இரு பிரிவுகளை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக மத்திய நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் குப்தா மற்றும் 5 பேர் மீது டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி பரத் பராஷர் முன் நடந்த இந்த விசாரணையில் மேற்படி 6 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டது.

    இவர்களுக்கான தண்டனை விவரம் நாளை (புதன்கிழமை) அறிவிக்கப்படுகிறது. இந்த வழக்கில் 6 பேருக்கும் அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என சி.பி.ஐ. தரப்பு கோர்ட்டில் வாதிட்டது. எனினும் 70 வயது குப்தாவுக்கு பல்வேறு நோய்கள் இருப்பதால் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அவரது வக்கீல் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது. #CoalScam #Punishment #HCGupta 
    ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மதுகோடா இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவரை கட்சி நிர்வாகிகள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். #congress #MadhuKoda
    சாய்பாசா:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2006ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை முதல்வராக பதவி வகித்தவர் மதுகோடா. முதலமைச்சராக பதவியேற்ற மூன்றாவது சுயேட்சை உறுப்பினர் என்ற பெருமையை பெற்ற இவர், இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டாக்டர் அஜோய் குமார் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். அவரை கட்சி நிர்வாகிகள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். 

    நிலக்கரி ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற மது கோடா பின்னர் பெயிலில் விடுவிக்கப்பட்டார். இதேபோல் மற்றொரு நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கும் அவர் மீது உள்ளது. அமர்கோண்டா முர்காதங்கல் நிலக்கரி சுரங்கத்தை ஒதுக்கீடு செய்ததில் ஜிண்டால் ஸ்டீல் மற்றும் ககன் ஸ்பாஞ்ச் அயர்ன் நிறுவனங்களுக்கு  சாதகமாக செயல்பட்டதாக மது கோடா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

    கடந்த மாதம் மது கோடாவின் மனைவியும் எம்எல்ஏவுமான கீதா கோடாவும் காங்கிரசில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. #congress #MadhuKoda
    ×